LYRIC
வானில் தேடி நின்றேன்
ஆயின் நீயடைந்தாய்
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்
என்னை நட்சத்திரக்காட்டில்
அலையவிட்டாய்
நான் என்ற எண்ணம்
தொலையவிட்டாய்
நல்லையல்லை, நல்லையல்லை
நன்னிலவே நீ நல்லையல்லை
நல்லையல்லை, நல்லையல்லை
நல்லிரவே நீ நல்லையல்லை
ஒளிகளின் தேடல்
என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே…
மௌனத்தின் தேடல்
என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே…
நானுன்னைத்தேடும்
வேலையிலே நீ
மேகம் சூடி ஓடிவிட்டா…ய்
நல்லையல்லை, நல்லையல்லை
நன்னிலவே நீ நல்லையல்லை
நல்லையல்லை, நல்லையல்லை
நல்லிரவே நீ நல்லையல்லை
முகை முகில்
முத்தென்ற நிலைகளிலே
முகந்தொட காத்திருந்தே……ன்
மலர்கின்ற நிலைவிட்டுப்
பூத்திருந்தால்
மனம் கொள்ள காத்திருந்தே……ன்
மகரந்தம் தேடி நகரும் முன்னே
வெய்யில் கா…ட்டில் வீழ்ந்துவிட்டாய்
நல்லையல்லை, நல்லையல்லை
நாரும் பூவே நீ நல்லையல்லை
நல்லையல்லை, நல்லையல்லை
முல்லை கொள்ளை நீ நல்லையல்லை
No comments yet